Friday, July 29, 2011

கிறுக்கல்-2

செம்பருத்தி பூவின் மகரந்தம் உருவி
குங்குமக் கரைசல் பாலுடன் கலந்து
வானவில்லின் நிறங்கள் பிசைந்து
வெண்மதியின் குளிர்மை ஊட்டி
உன்னை செய்தானோ பிரம்மன்

உன் உடலில் கணவாய் வைத்து
பள்ளத்தாக்கு வெட்டி
ஓமோன்கள் பாய்ச்சி
மின்சாரம் செய்தானோ பிரம்மன்


நரம்புகள் என்னும் வயர்கள் பூட்டி
இடைநடுவே ஆளிகள் வைத்து
கண்கள் மூலம் மின்சாரம் பாய்சி
என்னை கொல்ல...........

Thursday, July 21, 2011

கிறுக்கல்-1

நீ இலத்திரன்
நான் புரோத்தன்
வா அணுகி அணுவாவோம்

நீயூத்திரன் இனத்திற்கே
ஏற்றம் கொடுக்கும் விஞ்ஞானத்தால்
முடியுமா உணக்கு
ஏற்றம் கொடுக்க?